Wednesday 23 December 2015

வரலாற்றில் இன்று ( டிசம்பர் 24 )
தந்தை பெரியார்
நினைவு நாள்

* அறிவு மனிதர்கள்
சிந்திக்க வேண்டும்
என்பதற்காகவே தவிர மற்றவர்களை அடிமைப் படுத்த அல்ல என்பதை பெரியார் ஆணித்தரமாக வற்புறுத்தினார்.
*ஆண்டவன் ஆணையே சாதி பேதம் என்றபோது அந்த ஆண்டவன் தேவையில்லை என்றார்.
*இழிவு வேலை என்று எதுவும் இல்லை என்றும்
எந்த வேலையையும் எல்லாரும் செய்ய வேண்டும் என்றார்.
* ஈரோட்டுப்பாதை
மட்டுமே  தமிழர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்ப்படுத்திய பாதை.
* உயர்வு தாழ்வு சாதியில் இல்லை என்பதே பெரியாரின் அசைக்க முடியாத
கொள்கை.
* ஊழ்வினை என்பது உன்னை ஏமாற்ற கண்டுபிடிக்கப்பட்ட
ஓர் ஏமாற்று வார்த்தை என்றார்.
* எல்லாம் அவன் செயல் என்றால் எது உன் செயல் என்று சிந்திக்க வைத்தார்.
* ஏன் எதற்கு எப்படி
என்ற வார்த்தைகள்  அகராதியில் உள்ளது என்பதை
அவரால்தான் தெரிந்து கொண்டோம் .
* அய்யப்படுவது
அறிவின் வளர்ச்சியைக் குறிக்கும் என்றவர்.
* ஒற்றுமையின்றி
இருந்தால் தமிழரின் சுயமரியாதை உணர்வு இல்லாமல் போய்விடும் என்றார்.
* ஓதுதல் ஓதுவித்தல் எல்லாருக்கும் பொதுவானது என்றார்.
* அவ்டதமாய் இருக்கும் அய்யாவின் கொள்கை இனி உலகை ஆள சூளுரைப்போம்.
* ஃ போல் சொன்னால் பகுத்தறிவு சாதிஒழிப்பு தன்மானம் இவைகள் பெரியார் வலியுறுத்தியது.

No comments:

Post a Comment